ஓசூர் அருகே சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

ஓசூர், மார்ச் 5:ஓசூர் அருகே, சிதிலமடைந்து காணப்படும் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர்  ரயில் நிலையம் அடுத்த வாசவி நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  உள்ளன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பல இடங்களில் இடிந்தும்,  மண்மூடி  தூர்ந்தும் உள்ளதால், கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது.  நகரின் பிரதான முகப்பில், 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் உடைந்ததால்  மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வாசவி நகர்  குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கழிவுநீர்  கால்வாய் மற்றும் சிறு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: