அம்பை, மார்ச் 5: கல்லிடைக்குறிச்சி அருகே துக்கம் விசாரித்து விட்டு திரும்பி வந்தபோது ஸ்கூட்டி மீது டெம்போ மோதியதில் தோழிகள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம் பேச்சிமுத்து மனைவி ராஜலெட்சுமி (32), பொன்மாநகர் மாரி செல்வம் மனைவி சரஸ்வதி (35), அயன் சிங்கம்பட்டி ஆறுமுக பெருமாள் மனைவி ஆறுமுகத்தம்மாள் (36). கல்லிடைக்குறிச்சி அருகே அடுத்தடுத்த பகுதியில் வசித்து வரும் இவர்கள் மூவரும் தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.