உசிலம்பட்டி, மார்ச். 5: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று யூனியன் சேர்மன் ரஞ்சனிசுதந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 13 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 21 தீர்மானங்கள் போடப்பட்டு வாசிக்கப்பட்டது. இந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.