கூடங்குளம் மீன் அரவை மில்லில் 1.75 லட்சம் திருட்டு

நெல்லை, மார்ச் 4: கூடங்குளம் மீன் அரவை மில்லில் 1.75 லட்சம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அருகே ஊரல்வாய்மொழியில் தனியாருக்கு சொந்தமான மீன் அரவை மில் உள்ளது. இங்கு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அலுவலகத்தில் பணத்தை வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவில் அலுவலகத்தின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து ரூ.1.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து மில் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் அளித்த புகாரின் ேபரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: