ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் கல்வி கண்காட்சி

நெல்லை, மார்ச் 4: தேசிய அறிவியல் தினத்தையொட்டி நெல்லை டவுன் ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் கல்வி கண்காட்சி நடந்தது.

நெல்லை டவுன் ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் கல்வி கண்காட்சி நடந்தது.  தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடந்த இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேட்டை மதிதா இந்துக்கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் கவிதா சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் ஜோனிட்டா, துணை முதல்வர் ரெஜினா வரவேற்றனர். இதையொட்டி மாணவர்கள் தாங்கள் தயாரித்து வைத்திருந்த அறிவியல்  உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறினர். இவற்றை சக மாணவ, மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் பார்த்து வியந்தனர்.

Related Stories: