சேலம், மார்ச் 3: சேலம் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் இருந்து ஊழியர்கள் பொருட்களை அபேஸ் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் உணவு சாப்பிடுவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகங்கள் கொண்டுவந்தார். அரசின் உதவியுடன் செயல்படும் இந்த உணவங்களில், மிகவும் குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இங்கு வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் உணவு பொருட்களின் விலை, தொழிலாளர்கள் சம்பளம் போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் ஒரு சில அம்மா உணவங்கள் தவிர, பெரும்பாலான உணவகங்கள் நஷ்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் சேலத்தில் அரசு மருத்துவமனையிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.