நல்லூர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஆலங்குளம், மார்ச் 1: ஆலங்குளம் அருகே நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை வகித்து 353 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் பீட்டர் பேரின்பராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.  பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல தலைவர் (பொறுப்பு) பில்லி, நல்லூர் சேகர தலைவர் வில்சன், துறை தலைவர்கள் சுப்பிரமணியன், பிரேம்ரோஸ் தாயம்மாள், கவிதா, சாந்தி, குளோரி தேவஞானம், வில்சன், கிறிஸ்டி, எபநேசர் பொன்செல்வி, அனிதா சுவீட்லின், மகாராணி எலிசபெத் மற்றும் பேராசியர்கள் விஜய் ஸ்டான்லி, டேவிட் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகுமார், சாமுவேல் செல்வின்துரை, ஜூலியன்ஸ் ராஜாசிங் செய்திருந்தனர்.

Related Stories: