காசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை

தண்டையார்ேபட்டை: காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் திவாகரன் (28). ரவுடி. நேற்று இரவு திவாகரன் காசிமேடு மீன் வியாபாரம் செய்யும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென திவாகரனின் கை, கால்கள் மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காசிமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காசிமேடு காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள திவாகரனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: