செங்கல்பட்டு, பிப். 26: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஓம்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இதில், கடலூர் வருவாய்த்துறை அலுவலகர்கள் மீது கடலூர் கலெக்டர் எடுத்துவரும் ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். கடலூர் கலெக்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய ஆணையிட வேண்டும்.