அருப்புக்கோட்டை, பிப். 20: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்ற வேளாண்மை அறிவியல் நிலையம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்திய திறன் மேம்பாட்டுக்கழகம் மத்திய அரசு மூலம் காளான் வளர்ப்பு குறித்த 25 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.