சேலத்தில் அத்தை இறந்த சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு சாவு

சேலம், பிப்.20: சேலம் குகை நெய்மண்டி அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் மாதையன் (43). இவர் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு சுமதி (35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாதையனின் அத்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான மாதையன் சில நாட்களாகவே அளவுக்கு அதிகமாக குடித்து கொண்டிருந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இப்படியே குடித்து கொண்டிருந்தால் குடும்பத்தை யார் கவனிப்பார்கள் என கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதையன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி மற்றும் குடும்பத் தினர் கதறி அழுதனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தன

Related Stories: