சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னையை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சென்னை’ மூலம் 18 வயதிற்கு மேற்பட்டு 35 வயதிற்குட்பட்ட கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் செயல்பட்டு வரும் யூத் 4 ஜாப்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 2 மாத குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.