ஓமலூர், பிப்.19: பெரியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், மது அருந்துபவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் பலரும் விளையாட்டு மைதானத்தை மது அருந்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலை.யில் விளையாட்டு துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடலை சுற்றி அரசு பொறியியல் கல்லூரி, தண்ணீர் தொட்டி, கோட்டகவுண்டபட்டி, சாமிநாயக்கன்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பல்கலைக்கழக மைதானத்தை சுற்றி போதிய சுற்றுச்சுவர், இரவு நேர காவலாளி இல்லாத நிலையில், எப்போதும் திறந்த வெளியாகவே உள்ளது.