ஓசூர், பிப்.19: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருச்சியில் வரும் 22ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தேசத்தை காப்போம் பேரணி நடக்கிறது. இதனை விளக்கியும், பேரணிக்கு அழைப்பு விடுத்தும் ஓசூர் பகுதியில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஓசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர்.