சென்னை, பிப். 19: குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது, ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அருகே சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி. வேன் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு கலாசரன் (3), நிஷாந்த் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதையடுத்து முத்துமாரி, விஜயலட்சுமியை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், முத்துமாரி, விஜயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜயலட்சுமி, இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு வீடு திரும்பாததால் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தேடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.