திருச்சுழி, பிப்.18: நரிக்குடி அருகே குடும்ப பிரச்சனையால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் நேற்று கண்மாய் கரையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். நரிக்குடி அருகே உள்ள கத்தாளகுளத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (35) என்பவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்று விட்டார். இது குறித்து முத்துமாரி அ.முக்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிந்த போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் நரிக்குடி கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் கூறியுள்ளனர்.