சிவகாசி. பிப்.17: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 54 ஊராட்சி மன்ற தலைவர்கள் சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 54 ஊராட்சி மன்றத் தலைவர்களும் சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றை தொடங்க முடிவு செய்தனர். அதன்படி 54 ஊராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்றது. நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். சித்துராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதிசுப்புராஜ் முன்னிலை வகித்தார்.