சிவகாசி வட்டாரத்தில் வயல் தினவிழா

சிவகாசி, பிப். 17: சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம் மக்காச்சோளம் அறுவடையை முன்னிட்டு வயல் தினவிழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் சுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வனஜா கலந்து கொண்டு மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் தடுப்புமுறைகள் குறித்து விரிவாக கூறினார்.

இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை சிவகாசி வட்டார வட்டார தொழில்நுட்ப மேலாளர் வனஜா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: