விருதுநகர்,பிப்.17: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 தாசில்தார்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று 13 வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் கலெக்டர் கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாறுதல் செய்யப்பட்ட பிடிஓக்கள்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) சத்தியவதி ராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), ராஜபாளையம் செல்வராஜ் காரியாபட்டி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), காரியாபட்டி மாரியம்மாள் விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும், விருதுநகர் உதவி இயக்குநர் அலுவலக சங்கரநாராயணன் விருதுநகர் உதவி இயக்குநர் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சிவகாசி ஊராட்சி சிவக்குமார் ராஜபாளையம் ஊராட்சி வட்டாரவளர்ச்சி அலுவலராகவும்,