கிருஷ்ணகிரி, பிப்.13: ராயக்கோட்டை அரசு பள்ளியில் 510 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை முருகன் எம்எல்ஏ வழங்கினார். ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை புனிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் பங்கேற்று, 288 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிடிஏ நிர்வாகிகள் பாலசந்தர், சீனிவாசன், சுப்பிரமணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சின்னராஜ், சாந்திஅரியப்பன், நாகராஜன், முன்னாள் துணைத் தலைவர் நாகராஜ், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் நன்றி கூறினார். இதேபோல் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 222 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை முருகன் எம்எல்ஏ வழங்கினார்.