வாய்மேட்டில் தமிழகம் மருத்துவமனை திறப்பு விழா

வேதாரண்யம்,பிப்.12: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கில் டாக்டர் ராஜ்குமாரால் புதிதாக கட்டப்பட்ட தமிழகம் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் புகேழந்திர வரவேற்றார். மருத்துவ மனையை தொழிலதிபர் பாலசுப்பிரமணிய தேவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேதரெத்தினம், காமராஜ், தொழிலதிபர்கள் குணசேகரன், சக்திபிரியா ஆறுமுகம், கருணாநிதி, ஆயக்காரன்புலம் பிரபு வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, சிபி அறக்கட்டளை அய்யாத்துரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனை நிர்வாகி தமிழரசி நன்றி கூறினார்.

Related Stories: