ஈரோடு, பிப். 12: கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம் குமணன் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (50). இவர் சொந்த வேலை காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அங்கிருந்து அவர் ஈரோடு வருவதற்காக நேற்று முன்தினம் பஸ் ஏறினார். அந்த பஸ் ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அப்போது அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால் பழனிசாமி இறங்காமல் இருக்கையில் இருந்தார். இதனால் டிரைவர் அவரை எழுப்ப முயன்றபோது அவர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.