சத்தியமங்கலம், பிப். 12: புஞ்சைபுளியம்பட்டியில் இ.கம்யூ. கிளை அமைப்பு கூட்டம் ஜீவானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 15வது வார்டு கிளையின் செயலாளராக வரதராஜ், துணை செயலாளராக பெருமாள்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் உள்ள ஜவகர் இணை தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இத்தெருவில் பல ஆண்டுகளாக மின்கம்பங்களில் தெருவிளக்கு பொருத்தவில்லை.