நெல்லை, பிப். 11: நெல்லை, ெதன்காசி மாவட்டத்தில் 39,323 மாணவ, மாணவிகளுக்கு இலவச ைசக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.நெல்லை, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி, மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசியதாவது: எதிர்காலத்தின் சிறந்த சமூகத்தை உருவாக்க நிகழ்கால மாணவ சமுதாயத்திற்கு நல்ல முறையில் கல்வி வழங்கும் வகையில் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், சீருடை என 14 வகையான நலத்திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். இதன் மூலம் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காட்டில் 100 சதவீதத்தை எட்டச் செய்து கல்வி புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 28,107 மாணவ, மாணவிகள், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் 11,216 மாணவ, மாணவிகள் என மொத்தம் 39,323 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது, என்றார்.