சிவகாசி. பிப். 7: அரசு டிப்போவில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிக்கான ஆணையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விருதுநகர் மண்டலம் பகுதியில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கண்டக்டர் பணி அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஆணையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று வழங்கினார்.அதன்படி விருதுநகர் ரோசல்பட்டி ரோடு சிவகுமார், அருப்புக்கோட்டையை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி, சாத்தூர் சரவணன், விருதுநகர் பாலாஜி, திருவில்லிபுத்தூர் வெங்கடேஷ்குமார், விருதுநகர் பிரகாஷ்ராஜ், சிவகாசி கார்த்தி, ராஜபாளையம் செல்லப்பாண்டி ஆகிய 8 பேருக்கும் வாரிசு பணி ஆணையை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.