அம்பை, ஜன. 30: கல்லிடைக்குறிச்சி ஒர்க்ஷாப்பில் நேற்று காலையில் நடந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. அம்பை - கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் பள்ளி அருகே ஆட்டோ ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வாகனங்கள் சர்வீசுக்கு விடப்பட்டிருந்தன. நேற்று காலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை உருவானது. ஒர்க்ஷாப் உரிமையாளர் அம்பை ஊர்க்காட்டைச் சேர்ந்த ராஜா(42) சம்பவ இடம் வந்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார்.