×

ல்வேறு கட்சியில் இருந்து விலகிய 250 பேர் திமுகவில் இணைந்தனர்

ஓமலூர், ஜன.29: தொளசம்பட்டி பகுதியில் அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 250 பேர் திமுகவில் சேர்ந்தனர். ஓமலூர் அருகே தொளசம்பட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி காட்சிகளில் இருந்து விலகி 250 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமாரன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திரன் வரவேற்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, விவசாய அணி கருணாகரன், அருமை சுந்தரம், சம்பு சண்முகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஊராட்சி செயலாளர் சம்பத், தொளசம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கோகிலா சென்னிமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மணிகண்டன்,  பாரிவள்ளல், பொன்னுவேல், செந்தில்குமார், தங்கராஜ், தங்கவேல், மணிகண்டன்  ஆகியோர் தலைமையில் 250 பேர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் போத்தன், மாவட்ட மாணவரணி அருண் பிரசன்னா, ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, பொறியாளரணி ரமேஷ், மாணவரணி ரமேஷ், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, மாதேசன், ராதாகிருஷ்ணன், ராஜா, ஆட்டுக்காரனூர் பிரபு, கோவிந்தராஜ், மதிவாணன், பாலசுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளம்பிள்ளை:  மகுடஞ்சாவடியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம், நேற்று நடந்தது.  இதில் சேலம் எம்பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காவேரி மற்றும் திமுக நிர்வாகிகள் சம்பத்குமார், அன்பழகன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காளிகவுண்டம்பாளையம் முத்து, ஏகாபுரம் ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன் ஆகியோர் தலைமையில், பாமக, அதிமுக மற்றும் தேமுதிகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர், திமுகவில் இணைந்தனர்.

Tags : DMK ,dissidents ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி