சிறுமி மாயம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி எம்ஜூஆர் நகரை சேர்ந்த 15வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார். பின்னர், வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி பாரத்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: