கிருஷ்ணகிரி, ஜன.28: காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடியில் உள்ள ரிச்மான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா பள்ளி நிறுவனர் மாதேசன் தலைமையில் நடந்தது. தாளாளர் கலைமணி மாதேசன் வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நிறுவனர் மாதேசன் பரிசுகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ரவீந்தர் மேற்பார்வையில் கணிதபேராசிரியர் ஸ்ரீரங்கன் , ஆசிரியர்கள் செய்திருந்தனர்.