குடியரசு தினத்தையொட்டி கட்சி தலைவர்கள் தேசிய கொடியேற்றினர்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி தலைமை அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றினர். நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு  தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், துணை தலைவர் தாமோதரன், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், ஊடக துறை தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம்  க.வீரபாண்டியன், சிவராஜசேகரன், அணி தலைவர்கள் செல்வபெருந்தகை, ஹசன் ஆரூண், ஜான்சிராணி மற்றும் திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

முன்னதாக சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. விழாவில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

* தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை ெசலுத்தினார். நிகழ்ச்சியில், மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர் கோவை  தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், அண்ணாநகர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

* தி.நகரில் உள்ள சமக தலைமை  அலுவலகத்தில் கட்சி பொருளாளர் சுந்தரேசன் தேசிய கொடியை ஏற்றி தொண்டர்கள்,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநில துணை பொது  செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில இளைஞரணி இணைச்  செயலாளர் மகாலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசியகொடி ஏற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைமையகத்தில், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தேசியக்கொடி ஏற்றிவைத்து  உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர்  அணி மாநில தலைவர்  முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேப்பேரியில் உள்ள மார்க்  நடுநிலைப்பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் அல் அமீன் குர் ஆன்  மதரஸாவில் தேசிய கொடியை ஏற்றினார்.

* பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் புரசைவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எம்.முகமது இஸ்மாயில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.

* மண்ணடியில் உள்ள தமுமுக - மமக தலைமையகத்தில் தலைவர் ஜவாஹிருல்லா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை படித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளிய  மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Related Stories: