கிருஷ்ணகிரி, ஜன.24: பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான்களில் இரண்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்ட நிலையில், ஒரு மான் பரிதாபமாக இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஜெயின்கொல்லை பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவேந்திரன்(60). இவரது விவசாய நிலத்தில், 65 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் தற்போது 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலத்தின் அருகே, பூமலை காடு, நேரலக்கோட்டை காப்புக்காடு மற்றும் ஒப்பதவாடி வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை, தண்ணீர் தேடி பூமலை காட்டில் இருந்து 3 புள்ளிமான்கள் விவசாய நிலத்திற்கு புகுந்தன. அதனை கண்டதும் அங்கிருந்த தெருநாய்கள் துரத்தியுள்ளது.