ஓசூர், ஜன.24: திமுக மாணவரணி சார்பில் ஓசூரில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா தலைமை வகிக்கிறார். சத்யா எம்எல்ஏ வரவேற்கிறார். ஒன்றிய செயலாளர்கள் சீனிவாச ரெட்டி, சின்னபில்லப்பா, திவாகர், நாகேஷ், ரகுநாத், கணேசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.