ஓசூர், ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ராம்நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.பி பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசியதாவது:
பர்கூர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். ஓசூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சரானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலமுறை வெற்றி பெற்றார்கள். ஆனால், யாரும் அமைச்சராகவில்லை. பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராவார்.