×

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.வினர் வீடு வீடாக துண்டுபிரசுரம் விநியோகம்

நாகர்கோவில், ஜன. 22: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவில் மாநகர பா.ஜ சார்பில் நாகர்கோவில் செட்டிதெருவில் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல் தலைவர் நாகராஜன், மாவட்ட பார்வையாளர் தேவ், துணை தலைவர் முத்துராமன், முன்னாள் நகர தலைவர் ராஜன், நிர்வாகிகள் ஜெயராமன், வேணுகிருஷ்ணன், மகாராஜ பிள்ளை, சசிகலா, அசோகன், ராஜன், ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : house ,BJP ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்