×

கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்

நித்திரவிளை,ஏப்.23 : கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜின் குமார் (34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட சென்று உள்ளார். சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்தும் உணவு வரவில்லை. தனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாகவும், 2 தோசையாவது தருமாறும் கூறியுள்ளார். அதேவேளையில் ஊழியர்கள் ஜின்குமாருக்கு உணவு கொடுக்காமல் எழும்பி வெளியே போக சொல்லி உள்ளனர்.

ஆனால் அவர் வெளியே போகாமல் உட்கார்ந்து இருந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 ஊழியர்களும் சேர்ந்து அவரை பல பகுதிகளில் தாக்கியதாக கூப்படுகிறது. பின்னர் அவரை பிடித்து மிதித்து ஓட்டலின் வெளியே தள்ளியதாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜின்குமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் 3 ஓட்டல் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kollangod ,NITHIRAVILA ,JIN KUMAR ,KATHUKADI ,KOLANGOD ,Kanchampadham ,
× RELATED பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன்பு தீ குளித்த வாலிபர் பலி