நாகை, ஜன.22: நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா வரும் 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புது தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட நாகையில் 40 தெருக்களின் வழியாக சென்று பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சென்றடையும். இதை தொடர்ந்து நாகூரில் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடையும். கொடியேற்றம் முடிந்தவுடன் 4ம் தேதி சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி கடற்கரை செல்லுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.