சென்னை: பெரம்பூரில் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் வியசார்பாடி பெரியார்நகர் இஸ்மாயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் சந்தோஷ்குமார்(23). இவர் மீது செம்பியம், வியசார்பாடி, எம்.கே.பிநகர் ஆகிய காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், சந்தோஷ்குமார் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டு அருகே அம்பேத்கர் தெரு பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே,8 பேர் கொண்ட,மர்ம ரவுடி கும்பல் 3 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கியதும், சந்தோசை, வெட்ட தொடங்கினர். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த சந்தோஷ், பயந்து, உயிர் தப்ப அருகே இருந்த அவரது வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார். ஆனால், மர்ம கும்பல் அவரை துரத்தி சென்று, வீட்டிற்குள் புகுந்து சந்தோசை சரமாரியாக வெட்டினார்கள்.