சீர்காழி, ஜன.14: சீர்காழி கல்வி மாவட்ட சாரண சங்கத்தின் சார்பில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆண்டு முகாம் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் 283 சாரணர், 117 சாரணியர்கள் பங்கேற்ற உலக சமாதான பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு முகாமில் 50க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கலந்து கொண்டன. தொடக்க நாள் இரவு நடந்த பாடித் தீ (கேம்ப் பயர்) நிகழ்ச்சியில் ஏராளமான சாரண சாரணியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், மாவட்ட தலைவரும், தலைமை ஆசிரியருமான அறிவுடைநம்பி, சாரண ஆணையர் செந்தாமரை கண்ணன், லயன்ஸ் தலைவர் யுவராஜ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் தலைமை ஆசிரியர்கள் ராஜசேகர், கார்திகேயன் ராமலிங்கம், பொருளாளர் அசோக்குமார், சாரணிய அமைப்பு ஆணையர் காந்திமதி மற்றும் மாவட்ட செயலாளர் காசி இளங்கோவன், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல், இயக்குனர் ஆதித்தியா ராஜ்கமல் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.