வாலிபர் மீது தாக்குதல்

திசையன்விளை, ஜன.13: திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர் அற்புதராஜ் மகன் ராஜசேகர் டேவிட் பாண்டியன்(40). இவர் சாலையில் நடந்து சென்றபோது எதிரே மொபட்டில் வந்த அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் கிருபா(45)என்பவர் ராஜசேகர் மீது மொபட்டை மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டிக்கேட்ட ராஜசேகரை கிருபா தாக்கினார். காயமடைந்த ராஜசேகர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: