கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி குலோபல் பேமிலி அமைப்பு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதியை வலியுறுத்தி 8 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதை முன்னாள் எம்எல்ஏ., மேகநாதன் துவக்கி வைத்தார். குலோபல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பு வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த நடைபயணம், ராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டி வரை 8 கி.மீ., தூரம் சென்று நிறைவடைந்தது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.