குடோனில் தீவிபத்து

பெரம்பூர்: பெரம்பூர், பேப்பர் மில் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு சொந்தமான குடோன் கே.சி.கார்டன் 3வது தெருவில் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துகொண்டு வெளியில் ஓடி வந்தனர்.

தகவலறிந்து வியாசர்பாடி, செம்பியம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: