பெரம்பூர்: செம்பியம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயின், செல்போன் பறிப்பு சம்பவம் அடிக்கடி நடப்பதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையம், லோகோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் ஆகிய 3 ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையான சிறுவள்ளூர் சாலையில் காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது.