சென்னை: மெரினா, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி போன்ற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக 160க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, துணை ஆணையர் சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில் ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கர், மயிலாப்பூர் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். திருடுபோன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து விசாரித்தபோது, கேரளாவில் உள்ள ஒரு முகவரிடம் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.