சென்னை: ஜேஎன்யு மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று 3ம் நாளாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய 5 மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரவு, பகல் பாராமல் சென்னை பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டத்தை தொடர்ந்தனர்.