நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டியவர் தூக்கிட்டு தற்கொலை

திருவேங்கடம், ஜன. 9:  திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(62). இவரது மனைவி காளியம்மாள் (55). காளியம்மாள் மீது சந்தேகப்பட்டு மாரியப்பன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் காளியம்மாள் ஊருக்கு கிழக்கே உள்ள வயலுக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாரியப்பன், மறைத்து வைத்திருந்த அறிவாளால் காளியம்மாளின் கழுத்து மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மனைவி இறந்துவிட்டால், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிய மாரியப்பன், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு கொண்டார்.

தகவலறிந்த திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ சத்தியவேந்தன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த காளியம்மாளை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாரியப்பன் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related Stories: