சென்னை: காதல் திருமணம் செய்த பெண்ணை அடித்து உதைத்து காரில் கடத்திய பெண்ணை வீட்டாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் சிவராஜ் (20). கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மதுரையை சேர்ந்த பொன்னியம்மாள் (எ) மோனிகா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம், பொன்னியம்மாளின் பெற்றோருக்கு தெரியவந்தது. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கடந்த மாதம் 15ம் தேதி மதுரை, அழகர்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் திருமணம் முடித்த கையோடு புதுமண தம்பதி சென்னைக்கு வந்துவிட்டனர். இதையடுத்து, நெற்குன்றத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் பொன்னியம்மாள் வீட்டார் கடும் அதிருப்தியில் இருந்தனர்.