திசையன்விளை, ஜன. 7: திசையன்விளையில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திசையன்விளையில் தீயணைப்பு நிலையம், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில், சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது. இதையேற்று இன்பதுரை எம்எல்ஏ முயற்சியால் புதிய கட்டிடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.