சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் அனைத்தும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. அதன்படி மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்ட குழு தலைவர் பதவியை திமுக பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணியில், திமுக 17, காங்கிரஸ் 1 என 18 இடங்களையும், அதிமுக கூட்டணியில் அதிமுக 5, பாமக 1 என 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிக இடங்களை திமுக.,வே கைப்பற்றி உள்ளதால் இக்கட்சியே மாவட்ட குழு தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.