பெரம்பூர்: மாநகராட்சி 6வது மண்டலத்தில் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகின்றனர். சென்னையில் அதிகரித்துவரும் கொசுத் தொல்லையை போக்க வாரத்தில் இரண்டு நாட்கள் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மாநகர கமிஷனர், மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் கழிவு நீர் தேங்கக்கூடாது. கொசு உற்பத்தி ஆகக்கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து அதிகாரிகளை முடுக்கிவிட்ட மாநகராட்சி நிர்வாகம் அடுத்த பணிக்கு சென்றுவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வட சென்னையில் பல பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.