சென்னை, டிச. 30: ஜனநாயக் வழியில் போராடுவோரை கைது செய்யும் நடவடிக்கை காவல் துறையின் அராஜக போக்கு என்று, எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை:குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள், பெண்கள், அறிவுஜீவிகள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத பாஜ அரசு அடக்குமுறையின் மூலமாக போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் ஜனநாயக வழியில் போராடி வரும் பல்வேறு அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை காவல் துறை பதிவு செய்து வருகின்றது.